சந்திரசேகர ராவிடம் நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் உடல்நிலை குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது வீட்டின் கழிவறையில் கடந்த வியாழக்கிழமை இரவு வழுக்கி விழுந்து விட்டார்.

இதில் காயமடைந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. 

அப்போது அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர் சந்திரசேகர ராவுக்கு மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் செய்து முடித்துள்ளனர். 

அறுவை சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகர ராவ் நலமாக இருப்பதாகவும் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தெலுங்கானா முதல்வராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரசேகர ராவின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார். இதனை தொடர்ந்து சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana Chief Minister health inquired Chandrasekhar Rao


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->