தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்தது - பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக நேற்று சென்னை வந்திருந்தார். அப்போது 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1152 வீடுகளுக்கான சாவியை பயனாளிகளிடம் வழங்கினார்.

முன்னதாக விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி பெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு வரைக்கும் வழி நெடுகிலும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது தமிழக பயணம் இனிமையாகவும் மறக்கமுடியாத ஒன்றாக இருந்ததாகவும் கூறி, தமிழக மக்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய விழாவின் முக்கிய காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thank you tamilnadu prime minister Modi tweet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->