தேனிலவுக்கு சென்ற இடத்தில் பரிதாபம்.! குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை பலி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை குதிரை சவாரி சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23). இவருக்கு அண்மையில் திருமண நடைபெற்ற நிலையில் மனைவியுடன் மாதேரனுக்கு தேனிலவு சென்றார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு வந்த நிலையில், நான்கு பேரும் குதிரை சவாரி செய்வதற்காக தனித்தனியாக நான்கு குதிரையில் ஏறி அமர்த்தனர்.

இதையடுத்து அனைவரும் குதிரை சவாரி செய்தபோது, முகமது காஷிப் சென்ற குதிரை அதிவேகமாக ஓடியதால் நிலை தடுமாறி முகமது காஷிப் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மனைவி மற்றும் அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முகமது காஷிப் உயிரிழந்துள்ளார். மேலும் குதிரை சவாரி செய்யும் போது தலைக்கவசம் அணியாதது, இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The new groom died while riding a horse on his honeymoon in Maharashtra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->