20 ஆயிரம் மாணவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, சர்ச்சைகளுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமை!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நீட் தேர்வு பற்றி பல சர்ச்சைகள் உள்ளன, ஆனால் தற்போது ஒரு நீட் தேர்வு விவகாரம் உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்லபட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 20 ஆயிரம் மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் 67 மாணவர்கள் எப்படி முதல் ரேங்கில் தேர்வானார்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. மேலும், அத்தனை மாணவர்களுக்கு எப்படி 720க்கு 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.இது தவிர மேலும் சில கேள்விகளும் உச்ச நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.

இது குறித்து கல்வி நிபுணர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் இல்லையென்றால் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்திருந்தால், 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பார் என்றும், ஒரே ஒரு கேள்வி தவறாகப் பெற்றிருந்தால், மைனஸ் மதிப்பெண் காரணமாக, தேர்வில் அதிகபட்சம் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம் என்றும் அந்த மனுதாரர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஒரு கேள்வியை மாணவர்கள் தவறவிட்டால், 716 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருப்பார். தற்போது நடந்த தேர்வில் பல மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

நீட் தேர்வுக்கு பெருகி வரும் எதிர்ப்புகளுக்கு நடுவில், தற்போது நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க எந்த நிபுணர் குழுவையும் தேசிய தேர்வு முகமை இன்னும்  அமைக்கவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thousands of student filed petition against neet exam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->