திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேற்கூரை - 3 மாணவிகள் காயம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றின் கட்டடத்தின் மேற்பூச்சு இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் காயமடைந்தனர்.

இதைப்பார்த்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் மாணவி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த கட்டிடம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் கல்வித்துறைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three students injured for classroom roof collapse in chengalpat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->