திருப்பதி லட்டு விவகாரம்! லட்டு தயாரிப்பு கூடத்தில் பவன் கல்யான் பரிகார பூஜை!
Tirupati Lattu issue Pawan Kalyan parikara pooja at Laddu production hall
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டு நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக பரவிய புகாரை அடுத்து, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார பூஜையை தொடங்கினார். பரிகார பூஜை செய்வதற்காக பவன் கல்யாண், திருப்பதி மலைக்குச் சென்று, அலிபிரி நடைபாதை வழியாக ஏழுமலையான் கோவிலை நோக்கி நள்ளிரவில் பயணம் செய்தார்.
அந்த நடைபாதையில், பவன் கல்யாணை கண்ட பக்தர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். இந்த இடத்தில், பவன் கல்யாண், சமீபத்தில் நடைபாதையில் நடந்த சிறுத்தை தாக்குதலில் பாதிக்கப்பட்ட லக்ஷிதா மற்றும் காயமடைந்த சிறுவன் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பக்தர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
பவன் கல்யாண் மலை உச்சியில் தரிசனம் செய்த பிறகு, அன்னதான கூடத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். பவன் கல்யாணின் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து, பவன் கல்யாண், ஊடகங்களிடம் பேசும் போது, “திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது பற்றி உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்ட விசாரணை முடிவுகள் தெளிவாக வெளிவரவில்லை. இது தொடர்பாக நெய் கலப்படம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எதுவான விசாரணை முடிவுகளின் அடிப்படையில் தான் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்,” என்று கூறினார்.
பவன் கல்யாண் இந்த விவகாரத்தை மேலும் பரிசோதித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
English Summary
Tirupati Lattu issue Pawan Kalyan parikara pooja at Laddu production hall