தாக்குதல் சம்பவம் - தமிழக வீராங்கனைகள் டெல்லி வருகை.!
tn women kabbadi players come in delhi
பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். அதன்படி நேற்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது.
அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதத்தில் நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகள் தமிழக மாணவிகளைத் தாக்கியுள்ளனர். தேசிய அளவிலான கபடி போட்டியில் பல்கலைக்கழக அணி மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று இரவு தமிழகம் திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
tn women kabbadi players come in delhi