மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ ஹெராயின் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ ஹெராயின் பறிமுதல்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது, பயணி ஒருவரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் உகாண்டா நாட்டில் உள்ள என்டெப்பே நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த நபரிடம் சோதனை செய்ததில் அவர் அட்டைக்குள் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. சுமார் 2.4 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அவற்றின் சந்தை மதிப்பு ரூ.16.8 கோடி ஆகும். அதனை அதிகாரிகள் வீடியோவாகவும் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two kg drugs seized in mumbai airport


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->