நீட் வினாத்தாள் கசிவு! மேலும் 2 பேர் கைது! சிபிஐ அதிகாரிகள் தீவீர விசாரணை! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மேலும் இருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 67 மாணவர்களுக்கு 720க்கு 720 முழு மதிப்பெண் எடுத்தது நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7 பேரு முழு மதிப்பெண் எடுத்தது நீட் தேர்வில்  குளறுபடிகள் நடந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பீகார் தலைநகர பாட்னாவில் வினாத்தாள் கசிவு நாடி[பெற்று இருப்பது  தெரியவந்தது. அதேபோல் ஜார்கண்ட், குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு  சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தியது. சிபிஐ ஏற்கனவே 9 பேரை கைது செய்த நிலையில் மேலும் இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two more CBI officials arrested in connection with NEET exam question paper leak


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->