அடுத்தடுத்து நடந்த கொடூர விபத்து! 14 பேர் பலி!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்தும் தண்ணீர் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர்.

லக்னௌவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட டபுள் டெக்கர் பேருந்து, லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் பயணிக்கும் போது தண்ணீர் டேங்கர் லாரியுடன் மோதியது.  

காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் 8 பேர் உயிரிழக்க, 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

முன்னதாக சித்ரகூடில் நடந்த மற்றொரு விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, 5 பேர் காயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கதிமாவைச் சேர்ந்த 11 பேர் அஸ்தியை கரைத்து திரும்பிக் கொண்டிருந்த போது டிரக்குடன் மோதி, பின்னர் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttarpradesh car bus Road Accident 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->