உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளோம்! யுத்தத்தை கொடுக்கவில்லை - பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


நாம் உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளோம். யுத்தத்தை கொடுக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றினார்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்று அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா பயணத்தை முடித்து கொண்டு இரண்டு நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் காரல் நெகம்மரை மோடி சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.  இந்தியர்கள் முன் பிரதமர் மோடி பேசியதாவது, பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் நமது திறமை, அறிவை பகிர்ந்து வருகிறோம். நாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பின்னர், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று இந்தியா வந்தடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We have given Buddha to the world War is not given Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->