சென்னையை பதற வைத்த சம்பவம்! பெரும் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திகுறிப்பில், "சென்னை கொடுங்கையூரில் வீட்டில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

போதைப்பொருள் கடத்தல் மையமாக மட்டுமன்றி, உற்பத்தியும் செய்யும் அளவிற்கு போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். 

போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து வெளிவந்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

மேலும், இளைஞர்கள் இதுபோன்ற போதைப்பொருள் தயாரிப்பு போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளில் தங்கள் அறிவை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Condemn to DMK MK Stalin Govt CHennai College student drugs


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->