சாட்டை கைது: நாதகவுக்கு ஆதரவுகரம் நீட்டிய அதிமுக! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் அவதூறு பேசியதாக இன்று குற்றாலத்தில் வைத்து அவரைப் போலீசார் கைது செய்து இருந்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான்!

சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு!

பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின்,அவருடைய ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கும் நோக்கத்துடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக ஐடி விங்க் ஈரோடு மண்டலத்தின் செயலாளர் கவின் ராஜன், துணைத் தலைவர் பசுபதி ஆகியோரது இல்லங்களில் சோதனை மேற்கொள்ளும் விடியா திமுக அரசுக்கு எங்கள் கடும் கண்டனம். தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற ஏவல்களால் விமர்சனக்கணைகளை ஒடுக்கிவிட நினைக்கும் விடியா அரசின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ex minister jayakumar condemn for saattai Durai Murugan arrest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->