இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் - தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள், கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இன்னும் ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். 

என் அடுத்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK iradai elai simple case election commission Chennai High court case election commission Chennai High court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->