அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார். 

இவரது மகன் லிபின் ராஜா கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி திடீரென மாயமானார். இது குறித்து செல்லப்பன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் லிபின் ராஜாவை பழவூர் பகுதியில் கொலை செய்து புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் லிபின் ராஜாவின் உடலை தோண்டி எடுத்தனர். இவரது கொலை வழக்கில் தொடர்புடைய எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணையில், லிபின் ராஜாவுக்கும் எபினுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதனை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று லிபின் ராஜாவை எபின் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் அவர்கள் லிபின் ராஜாவை கட்டையால் தாக்கி கொலை செய்து புதைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MEMBER SON MUERDER CASE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->