#BREAKING | தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்திற்குப்பின் ஜெயக்குமார் அளித்த பரபரப்பு பேட்டி.! கடைசியில் ஒன்று சொன்னார் பாருங்க.! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பாக கலந்து கொண்ட ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தோம். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்கின்ற ஒரு அஜென்டா விவாதத்தில் பங்கு பெற்றோம். எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம்.

வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒரு தெருவில் வசிக்கின்ற நான்கு வீடுகள் மட்டும் வேறொரு வார்டில் வாக்களிக்க கூடிய நிலைமை உள்ளது. இடமறுதலின் காரணமாக ஒருவர் இரு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கிறார்கள். 

ஆதார் கார்டு உடன் வாக்காளர் அடையாள அட்டையை ஐடியை இணைப்பது மூலம் பல சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதே சமயத்தில் 11 ஆவணங்கள் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த கருத்து குறித்து விவாதித்தோம்" என்று தெரிவித்தனர்.

மேலும் செய்தியாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கலந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த ஜெயக்குமார், "அவர் எந்த கட்சி சார்பாக கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்தபடி நாங்கள் இருவர் கலந்து கொண்டோம். அதிமுக என்றால் அது நாங்கள் தான்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK JEYAKUMAR say about kovai selvaraj ops side


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->