அதிமுகவிற்கு துணை முதலமைச்சர் வெளியிட்ட வாழ்த்து செய்தி!
AP DyCM Pawan Kalyan Wish AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது துவக்க விழாவிற்கு வாழ்த்து ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "‘புரச்சித் தலைவர்’, திரு ‘எம்ஜிஆர்’ அவர்கள் மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்த்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. வரும் ‘அதிமுகவின் 53-வது தொடக்க நாளான ‘அக் 17ஆம் தேதி புரச்சித் தலைவர்’ அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
மயிலாப்பூரில் படிக்கும் போது எனது தமிழ் மொழி ஆசிரியர் மூலம் புரச்சித் தலைவரைப் பற்றி முதல் அறிமுகம் கிடைத்தது.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு எம்ஜிஆர் ஒளி" என்று தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் வாழ்த்துக்கு அதிமுக தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜாதி, மதசார்பற்ற" இயக்கமாக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் மக்களாட்சியை நிலைநாட்ட, சமத்துவம்-சமூகநீதி-சுயமரியாதை ஆகிய உயரிய விழுமியங்கள் தழைக்க, தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் செயல்படும், மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் வார்க்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, கழகத்தின் மூன்றாம் அத்தியாயம், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வீரியமிகு தலைமையில் செயல்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது துவக்க விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நன்றி!
English Summary
AP DyCM Pawan Kalyan Wish AIADMK