காற்றில் கம்பு சுற்றும் திருமாவளவன்! சாதி.. சாதி... திமுகவின் ஊது குழலே ஏன் இப்படி?! பாஜக தரப்பில் பதிலடி!  - Seithipunal
Seithipunal


விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், தலித் ஒற்றுமையும் இந்து ஒற்றுமையும் ஒன்றல்ல! 'இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்' என்பது 

சனாதனம் வலுப்பெறுவதற்காக எனப் பொருள்! 'தலித்துகள் ஒன்றுபட வேண்டும்' என்பது சனாதனத்தை தகர்ப்பதற்காக எனப் பொருள்!

தலித் ஒற்றுமை சிதறிவிடக் கூடாது எனக் கவலைப்படுவதற்கும்; காந்தியை போல இந்துக்கள் ஒற்றுமை சிதறிவிடக்கூடாது எனக் கவலைப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது! 

நாம் பேசுகிற தலித் ஒற்றுமை என்பது சனாதனத்திற்கு எதிரான யுத்தம்!
தலித்துகள் சிதறிப்போனால் சனாதனத்தை யாராலும் எதிர்க்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஹிந்துக்களை, அதாவது இந்தியர்களை பிளவுபடுத்தியது ஆங்கிலேயர்கள். தமிழகத்தில் தலித் மக்கள் என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தியது நீதிக்கட்சியினர்.

அந்த ஆங்கிலேயர்களின் வழியில், நீதிக்கட்சியின் நீட்சியான திமுகவின் ஊது குழலாக சமூகத்தை பிளவுபடுத்துவது திருமாவளவன் அவர்களே, நீங்கள் தான். 

சனாதனம் முடிவில்லாதது, அழிவில்லாதது, நிலையானது என்று தெரிந்து கொண்டே காற்றில் கம்பு சுற்றுவதை நிறுத்திக் கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சி, தேசத்தின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க முயற்சியுங்கள். சதா சர்வ காலமும் ஜாதி, ஜாதி என வெறுப்பை விதைப்பதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Condemn to VCK Thirumavalavan 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->