சென்னை: தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 35 மாணவிகள் பாதிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இதுவரை 35 மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் மருத்துவமனையில் குறைந்த படுக்கைகளே இருப்பதால், ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், தனியார் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் குவிந்த பெற்றோர், காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Chennai Private School Gas Leakage


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->