சென்னையில் அதிர்ச்சி!...போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது முன்னாள் டி.ஜி.பி மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் நந்தம்பாக்கத்தில் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டபோது, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜான் எஸி, மெக்கலன் மற்றும் அருண் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ. 1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அருண் என்பவர் முன்னாள் டி.ஜி.பி ரவீந்திரநாத் மகன் என்பது தெரியவந்துள்ளது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா அல்லது இவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in chennai ex dgp son arrested in drug smuggling case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->