தென் சென்னையில் நீயா? நானா? முக்கிய புள்ளியுடன் மல்லுக்கட்டும் குஷ்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. பிரதான கட்சிகளான அதிமுக திமுக தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் இந்த சூழலில் தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக தற்போது தனித்து களம் காண உள்ளது. இதற்கான பணிகளை தீவிர்படுத்தி உள்ள பாஜக தரப்பு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பிலும் இறங்கி உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பாஜகவின் தென் சென்னை தொகுதிக்கான தலைமை தேர்தல் பணிமனை வேளச்சேரி ராம் நகர் 6வது பிரதான சாலையில் இன்று திறக்கப்பட்டது.

இத்தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றதை அடுத்து இம்முறையும் அவரை களம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தென் சென்னை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனன் போட்டியிட்டார்.

இத்தகைய சூழலில் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக சார்பில் களமிறங்க அக்கட்சியின் மாநில செயலாளர் S.G சூர்யா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் சிறப்பாக களப்பணி ஆற்றிய நடிகை குஷ்புவுக்கு சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக போட்டியிட்டது. இந்த சூழ்நிலையில் இம்முறை நாடாளுமன்ற பொது தேர்தலில் களமிறங்க இரு பெரும் புள்ளிகள் மும்முரம் காட்டி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP SG surya khushboo interest to contest in South Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->