கஞ்சா வியாபாரிகளுடன் காவல் துறையின் கள்ளத் தொடர்பு - திமுக கூட்டணி கட்சியின் போஸ்டரால் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் காவல்துறை ஆய்வாளர் மரியாதைக்குரிய சுரேஷ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். 

பொங்கல் தினத்தன்று மூன்று பேர் கஞ்சா அடித்து விட்டு முன்னீர்பள்ளம் JJ நகர்ப் பகுதியில் பொதுமக்களை அரிவாளோடு மிரட்டியுள்ளனர். பைக்கில் வந்த இளைஞர் ஒருவரை வழிமறித்து நீ என்ன ஆளுடா ? என கேட்டு விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலநாட்கள் கடந்து விட்டதே கைது செய்யப்படவில்லையே என கேட்டேன்.

போன் சுவிட்ச் ஆப்ல உள்ளது. CDR கேட்டுள்ளோம். இரு காவலர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். சீக்கிரம் பிடிச்சுடுவோம் என S.P - ரேஞ்சில் பேசினார்.

கூடவே சம்மந்தப்பட்டவன் பெரிய குற்றவாளி  இல்லையாம்  என சான்றிதழும் கொடுத்தார்.

நல்லது. வேறு ஏதாவது நடந்த பிறகுதான் கைது நடவடக்கை இருக்கும்  போல. கஞ்சா வியாபாரிகளுடன் உள்ளூர் காவல் துறையின் கள்ளத் தொடர்பு குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MK STalin TN Police Ganja CPIM Nellai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->