உதயநிதியின் சனாதனம் வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சனாதனம் தொடர்பாக பேசிய வழக்கில் துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டித்து உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

சனாதனம் தொடர்பான வழக்குகளை தமிழ்நாட்டிற்கு மாற்ற கோரி உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மற்ற மாநில வழக்குகளின் நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்க அளித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், அதனை தற்போது நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சனாதனம் டெங்கு போன்றது அது அழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Udhayanithi Sanadhana case SC order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->