ஹரியானா சட்டசபை தேர்தல் : ஆம் ஆத்மி 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில்  வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையேயான  தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நிதித்து வந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த திங்கட்கிழமை ஆம் ஆத்மி வெளியிட்டது.  

இதற்கிடையே ஆம் ஆத்மி தனது இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் ஹென்ரி, சதௌரா,அதம்பூர், தானேசர், ரதியா, டைகான், பரிதாபாத் பர்வாலா மற்றும் பவால் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.  

இந்தநிலையில், ஆம் ஆத்மி தனது 3வது கட்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், அரியானா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக, கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் பிரவின் குஸ்கானியை ஆம் ஆத்மி நிறுத்தியுள்ளது.  90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில்,  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை  கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் சுஷில் குப்தா, ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முழு பலத்துடன் போட்டியிடும். ஊழல் நிறைந்த பாஜக அரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள் என்று சாடினார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Assembly Elections Aam Aadmi Party 3rd Phase List Released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->