கனமழை எதிரொலி: பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் நோக்கி வருவதால் நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கனமழையை எதிர்கொள்வதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் விடுத்துள்ள அறிவிப்பின்படி, நாளை நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heavy rain trichy university Postponement of exams


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->