கொடநாடு வழக்கு: கள்ள துப்பாக்கி... அதிமுகவின் முக்கிய புள்ளி தப்பி ஓடி தலைமறைவு!  - Seithipunal
Seithipunal


கொடநாடு வழக்கில் கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்த வழக்கில் அதிமுக நிர்வாகி துபாய்க்கு தப்பி ஓடி தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி, கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. 

இந்த சம்பவங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு உதாகை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கூடலூர் அடுத்த அள்ளூர் வயல் வெளியில் வனவிலங்குகளை வேட்டையாட, பணியாளர்களுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்த வழக்கில் 3வது குற்றவாளியாக சஞ்சீவன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் துபாய்க்கு தப்பி சென்று தலைமறைவான நிலையில், சஜீவனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Kodanad murder case ADMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->