அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி!...என்ன ஆச்சு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை துறையில் எந்த மாற்றமுமின்றி, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசாா் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு நேற்று மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு திடீரென்று வயிறு வலியும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து  சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், தொடர் சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதன் காரணமாக லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister anbil mahesh admitted to hospital do you know what's wrong


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->