ஆர் ஜே டி பெண் எம்எல்ஏ வை பார்த்து நிதிஷ் குமார் கேட்ட கேள்வியால் பீகார் சட்டப் பேரவையில் சலசலப்பு..!! - Seithipunal
Seithipunal


பீகார் சட்டப் பேரவையில் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்மாநில எதிர்க் கட்சிகள் நடத்திய அமளியால் கோபமடைந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க் கட்சியான ஆர்ஜேடி எம்எல்ஏ வை நோக்கி பேசிய பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீகார் மாநிலத்தில் தற்போது மழைக் கால சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் புதன் கிழமையான இன்று (ஜூலை 24) காலை சட்டப் பேரவை கூடியதும், எதிர்க் கட்சிகள் சாதிவாரி இட ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைத்தபடி அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் கோபமடைந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ஒருவரைப் பார்த்து கோபமாக பேசினார். அந்த பேச்சு தான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது ஆர்ஜேடி பெண் எம்எல்ஏ ரேகா பாஸ்வான் கேள்வி கேட்டார். 

அப்போது கோபமடைந்த நிதிஷ் குமார், எழுந்து நின்று அவரை நோக்கி, "எனது ஆட்சியில் தான் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம். அப்போது எங்களுடன் உங்கள் கட்சி கூட்டணியில் இருந்தது. நீங்களும் தான் அதை ஆதரித்தீர்கள். 

நீங்கள் ஒரு பெண் தானே? உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் கட்சி பெண்களுக்கு என்ன செய்துள்ளது? பெண்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது நாங்கள் தான். அதனால் தான் இப்போது உங்களால் இவ்வளவு பேச முடிகிறது. சாதிவாரி இட ஒதுக்கீட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" என்று கோபாமாக பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nitish Kumar Speech in Bihar Assembly Against RJD Women MLA


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->