அதிமுக பொதுக்குழு வழக்கு :: குறுக்கு வழியில் இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆகிறார்... ஓபிஎஸ் தரப்பினர் வாதம்..!! - Seithipunal
Seithipunal


இபிஎஸ் தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் இரண்டாவது நாள் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் ஓபிஎஸ் தரப்பினர் வாதத்தினை தொடங்கினர். அப்பொழுது "அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருக்கலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தேவைப்பட்டு இருக்காது. அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை பழனிச்சாமி கொண்டு வர முயற்சிப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சி விதிகள் திருத்தப்பட்டதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதே அதிமுகவின் நிர்வாக பதவிகள்.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் நடக்கும் எந்த முடிவும் இருவரும் இணைந்து எடுக்க வேண்டும் என்பதே விதி.

தேர்தல் முடிவு, நிர்வாகிகள் நியமனம், கட்சி அலுவலகம் என அனைத்திலும் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் தான் செல்லுபடி ஆகும். அதிமுக பொது குழு கூட்ட வேண்டும் என இருவரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தான் விதி உள்ளது. 

ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்ற பழனிச்சாமி முயற்சி செய்கிறார். ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு என்பது கட்சியின் அடிப்படை விதிகளோடு தொடர்புடையது. எடப்பாடி பழனிச்சாமி தனது வசதிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளார். அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி" என ஓபிஎஸ் தரப்பினர் வாதத்தினை முன்வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS side argue EPS trying illegally becomes general secretary


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->