அரியலூர் || நடுரோட்டில் தீப்பிடித்து எறிந்த கார் - ஒருவர் பலி.!
hotel owner died in ariyalur for car fire accident
அரியலூர் மாவட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் அன்பழகன் என்பவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து காரில் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் தீப்பிடித்து கொண்டது. இதில், ஓட்டல் உரிமையாளர் அன்பழகன் காருக்குள் சிக்கினார். அவரால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை அணைத்து காரில் இருந்த அன்பழகனை மீட்டனர். ஆனால், அன்பழகன் மூச்சு திணறி பலியானார். இதையடுத்து போலீசார் அவரை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் காரில் இருந்த எரிபொருள் கசிந்ததில் தீப்பற்றி இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
hotel owner died in ariyalur for car fire accident