ஸ்டாலின் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்..? ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி..!! ரவுண்டு கட்டிய ராஜன் செல்லப்பா..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தை அடுத்த திருப்பரங்குன்றத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா திமுகவையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டம் மேடையில் பேசிய அவர் "திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின் கட்டணம் 53% , வீட்டு வரி 100% உயர்த்தி விட்டனர். 

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். அதுவும் அவர் சிறப்பு திட்ட செயலாக்குத்துறை அமைச்சர் பதவி பெறப் போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்..? தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்து இருக்கும்போது முதலமைச்சரின் மகனுக்கு மகுடம் சூட்ட அவசரம் ஏன்..??

செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா..?? அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வருவாரா..? மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா..?? பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஓபிஎஸ் மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு சென்று விடலாம். அவ்வாறு சென்று விட்டாள் அதிமுகவுக்கு தொல்லை இருக்காது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்" என திமுகவையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajan Chellappa asks why Udhayanidhi is in a hurry to give a ministerial post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->