உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது!

உத்தர பிரதேச முதலமைச்சர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோகி ஆதித்யநாத், கடந்த 2007-ஆம் ஆண்டு கோரக்பூா் எம்.பி.யாக பதவி விகித்தபோது, அவரது பேச்சு இரு தரப்பினரிடையே பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற காரணமாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Supreme Court said suspended employees cannot take advantage absence |  सुप्रीम कोर्ट ने कहा सस्पेंड कर्मचारी अपनी अनुपस्थिति का फायदा नहीं उठा  सकते | Patrika News

இதனை தொடர்ந்து, கடந்த 2018-ஆம் பிப்ரவரி மாதம் இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு விசாரணையிலும், யோகி ஆதித்தயநாத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதிலும் எவ்வித நடைமுறை தவறும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது தலையிட வேண்டியது தேவையற்றது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court order to UP Chief Minister Yogi Adityanath case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->