எம்எல்ஏ.,வின் உதவியாளரால் ஒரு மாதம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கல்லூரி மாணவி! அதிர்ந்துபோன அரசியல் வட்டாரம்! - Seithipunal
Seithipunal


கல்லூரி விடுதியில் அனுமதியின்றி செல்போன் பயன்படுத்திய மாணவியை மிரட்டி, எம்எல்ஏவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் பாலியல் பலதகரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் ஹனம் கொண்டா கொண்ட பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியின் விடுதியில், முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த 22 வயது மாணவி தடையை மீறி செல்போன் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனைப் பயன்படுத்தி விடுதியின் உரிமையாளர் சோபா, மாணவியை மிரட்டி அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரால், என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். 

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விஜயகுமார், அதனை செல்போனில் வீடியோ எடுத்து, மாணவியை மிரட்டி, வாரங்கல் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினரின் தனி உதவியாளர் சிவகுமார் என்பவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிவக்குமார், விஜயகுமார் மட்டுமல்லாமல் மேலும் ஒரு நபர், மாணவியை பாலியல் பாலியல் பலாத்காரத்துக்கு மிரட்டவே, மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவியை ஒரு மாதமாக விஜயகுமார், சிவகுமார் இருவரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து விடுதி உரிமையாளர் சோபா, எம்எல்ஏவின் உதவியாளர் சிவகுமார் மற்றும் சோபாவின் உறவினர் விஜயகுமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தெலுங்கானா மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana MLA PA arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->