கோவையில் பயங்கரம்!...எதிர்க்கட்சியினர் மீதான கொலை வெறித் தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில்,
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோவை மாநகரில் கோவை மாநகராட்சி, குனியமுத்தூர் பகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 92-B வட்டச் செயலாளர் திரு. N. ராஜா (எ) ஜூனியர் ராஜா அரிவாளால் தாக்கிப் படுகாயம் அடைந்து மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

குனியமுத்தூர் பகுதியானது தனியார் கல்லூரிகள் அதிகமுள்ள பகுதியாகும். கல்லூரிக்கு அருகிலும், மாணவர்கள் தங்கும் விடுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவும், அரசியல் காரணமாகவும் திரு. ராஜாவுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பள்ளிகள் அருகே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக வரும் செய்திகளை, நான் பலமுறை அறிக்கைகள் மற்றம் பேட்டிகள் வாயிலாகவும், சட்டப் பேரவையில் எடுத்துரைத்தும், திரு. ஸ்டாலினின் தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்து வருகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக அரசில் தொடர்ந்து கழக நிர்வாகிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும். இந்த ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. தாக்குதலுக்குள்ளான கழக நிர்வாகிகள் அளித்த புகாரினை பதிவு செய்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறையை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terror in coimbatore edappadi palaniswami strongly condemns the murderous attack on the opposition


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->