நாங்கள் திமுகவை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


நேற்று மதுரையில் நடந்த அதிமுக ஜெயலலிதா பேரவை உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியதாவது:- கடந்த 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுக இயக்கத்தை ஆரம்பித்தார். 

இந்த இயக்கம் உருவாகி கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து அதே எழுச்சியுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால், கருணாநிதியின் குடும்ப சொத்தாக திமுக மாறிவிட்டது. எம்.ஜி.ஆர். எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழியில் நாங்கள் திமுகவை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம். 

இப்போது டி.டி.வி. தினகரனையும், ஓ.பி.எஸ்.சை வைத்துக்கொண்டு அதிமுகவை அசைத்து விடலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்து வருகிறார். அவர்கள் இருவரும் இரட்டை இலைக்கு எதிராக நின்று மண்ணை கவ்வி, செல்லாகாசாகி போய்விட்டார்கள். நமக்கு போட்டி திமுகதான் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

திமுக ஆட்சி வந்த பின்னர் மூன்று முறை மின்கட்டணம், சொத்துவரி உயர்ந்து 40 சதவீதம் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. வான்வெளி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக இந்த அரசு உள்ளது. 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி செய்தார்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister dindukal seenivasan speech about dmk


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->