வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டியா?
Wayanad Lok Sabha By election Khushbu vs Priyanka Gandhi
வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிராக, பாஜக சார்பில் நடிகை குஷ்பு களமிறக்கப்படுவார் என்ற தகவல் பரபரப்பாக வெளிவந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பிரியங்கா காந்திக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், குஷ்பு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஷ்பு இதுகுறித்து கூறுகையில், "தேர்தல் நெருங்கியவுடன் பல்வேறு வதந்திகள் பரப்பப்படும். வயநாட்டில் நான் போட்டியிடுவது தொடர்பாக பாஜக மேலிடம் என்னிடம் இதுவரை பேசவில்லை. எனினும், கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதை 100% திறம்பட நிறைவேற்றுவேன்" என்றார்.
இந்த தகவல், வயநாடு தொகுதியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்திற்குப் பொருளாகியுள்ளது.
English Summary
Wayanad Lok Sabha By election Khushbu vs Priyanka Gandhi