அதிர்ச்சி!...நடிகர் சல்மான் கானை கொலை செய்ய ரூ. 25 லட்சம் பேரம்! - Seithipunal
Seithipunal


நடிகர் சல்மான் கானை கொலை செய்ய, ரூ. 25 லட்சம் பேரம் நடத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்  போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிய வந்துள்ளது.


ஹரியானா மாநிலம்,லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலான மாபியா கும்பல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது இல்லத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக நடப்பு  ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் சல்மான் கான் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இதே போல், கடந்த ஜனவரி மாதத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாவது, நடிகர் சல்மான் கானை கொலை செய்ய, ரூ. 25 லட்சம் பேரம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பேரத்தை சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பேசி உள்ளான். கொலையில் ஈடுபட புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தில் உள்ள 18 வயதுக்கும் குறைவான சிறார்களை தேர்வு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocker actor salman khan was paid rupees 25 lakh bargain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->