காதலிக்க மறுத்த மருத்துவ கல்லூரி மாணவி! 'ஆபரேசன்' பிளேடால் கழுத்தறுத்து கொலை செய்த நாடக காதலன்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் காதலிக்க மறுத்த மருத்துவக் கல்லூரி மாணவியை, ஆப்ரேஷன் செய்யும் பிளேடால் கழுத்தை அறுத்து நாடகக் காதலன் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியில் சேர்ந்த தபஸ்வி என்ற 21 வயது மாணவி, விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். 

விஜயவாடாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி மாணவி தபஸ்வி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையே மணிகொண்டா பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் ஞானஷ்வர் என்பவர், சமூக வலைத்தளம் மூலம் மாணவி தபஸ்விக்கு நட்பாகியுள்ளார்.

பின்னர் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். 

தன்னை மீண்டும் காதலிக்கும்படி மாணவி தபஸ்வி தொடர்ந்து ஞானஷ்வரன் தொல்லை கொடுக்கும், விரட்டையும் வந்துள்ளான். ஞானேஸ்வரனின் இந்த மிரட்டல் காரணமாக மாணவி தபஸ்வி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் ஞானேஸ்வரனை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று ஞானேஸ்வரன் மாணவி தபஸ்வியை நேரில் சந்தித்து தன்னை மீண்டும் காதலிக்கும்படி வலியுறுத்தி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஞானிஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த ஆபரேஷன் செய்யும் பிளேடால் மாணவி தபஸ்வின் கழுத்தில் கழுத்தை அறுத்து உள்ளான்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி தபஸ்வி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, ஞானேஸ்வரனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Drama Love Murder college girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->