புரோ கபடி லீக்! பாட்னா அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது டெல்லி.! - Seithipunal
Seithipunal


விறுவிறுப்பாக நடைபெற்ற புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் பாட்னா அணியை வீழ்த்தி டெல்லி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டித் தொடரில் பாடனா, உத்திர பிரதேசம், டெல்லி, பெங்களூரு அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் பாட்னா அணி 38-27 என்ற புள்ளிக் கணக்கில் உத்திர பிரதேச அணியையும், டெல்லி அணி 40-35 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் வெற்றிக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி 25 -ஆம் தேதி 8.30 மணிக்கு நடைபெற்றது. இதற்கு முன்பு பாட்னா அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளது. தற்போது நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டெல்லி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடந்த முறை இறுதிப் போட்டியில் சிறிய அளவிலான வித்தியாசத்தில் பெங்கால் அணியிடம் கோப்பையை இழந்த டெல்லி அணி இந்த முறை அதை வெல்லும் முயற்சியில் தீவிரமாக களமாடியது.

பாட்ன, டெல்லி இடையேயான ஆட்டம் இரவு  8.30 மணிக்கு தொடங்கியது முதலே, பலத்த எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்றது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் மழை பொழிந்தனர். ஆட்ட நேர முடிவில்  37-36 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி பாட்னா அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dabang Delhi Champion in Pro Kabadi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->