பாகிஸ்தானை பஞ்சராக்க புறப்பட்ட குத்தீட்டி! ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு! - Seithipunal
Seithipunal


டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்கார் ஷுப்மன் கில், இந்தியா-பாகிஸ்தான் நாடக்கூடிய மைதானம் அமைந்துள்ள அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் சென்று இருப்பது, இந்திய  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிம்மதி அடைய செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கில், நல்ல பார்மில் ஆடி வரும் நிலையில், உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் கடந்த இரண்டு ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியுடனுன் மோதும் மூன்றாவது ஆட்டம் குஜராத் நரேந்திர மோடி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

வருகின்ற 14ஆம் தேதி நடக்கும் இந்த  ஆட்டத்தில் ஷுப்மன் கில் களமிறங்கினால் தான், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என்று இந்திய ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஷுப்மன் கில் களமிறங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது அவர் அகமதாபாத் புறப்பட்டு சென்றிருப்பது, அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc world cup 2023 ind vs pak match gill


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->