அதிரடி சோதனை: ராஜபாளையத்தில் சிக்கிய 120 கிலோ புகையிலை பொருட்கள்...! 3 பேரை கைது...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் 120 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அழகை நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருசக்கர வாகனத்தில் போலீசார் சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் புகையிலை பொருட்கள் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அழகை நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(28), முகில்வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த கணேசன்(30), பி.டி.ஆர். நகரை சேர்ந்த நவநீதன்(27) மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர்(26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கடத்தி வந்து 120 கிலோ புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கணேஷ் என்பவர் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் மற்ற மூன்று பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

120 kg of tobacco products seized in Rajapalayam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->