சேலத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்; உடந்தையாக இருந்த தாய்..! - Seithipunal
Seithipunal


தாய் கண் முன்னே 14 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்வபம் சேலத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு உடந்தையாக சிறுமியின் தாயார் இருந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர், அரசு பள்ளி ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த, லாரி டிரைவரான 50 வயதுடைய குமரேசன் என்பவர், தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம், தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். ஆசிரியை மாணவியின் தந்தையை வரவழைத்து, சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார்.  அதனடிப்படையில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார், விசாரணையை தொடங்கினர்.

குறித்த விசாரணையில், லாரி டிரைவர் குமரேசனுக்கு, சிறுமியின் தாயாருடன் பழக்கம் இருந்துள்ளது. அத்துடன், கடந்த, பிப்ரவரி.17-ஆம் தேதி, வீட்டில் இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குமரேசன் பலாத்காரம் செய்துள்ளார். 

இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். மீண்டும் பிப்ரவரி 20 மற்றும் மார்ச் 03 ஆகிய தேதிகளில், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயாரும், டிரைவர் குமரேசனுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆத்தூர் மகளிர் போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த, லாரி டிரைவர் குமரேசன், 50, சிறுமியின் தாயார் ஆகியோர் மீது, 'போக்சோ' மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 year old girl raped in Salem Mother was an accomplice


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->