சேலம் : மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து - 2 விவசாயிகள் பலி - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் கொண்டையம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி அன்புக்கரசன் (52). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான முகமதுகான்(40) என்பவரும் நேற்று இரவு பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது சவாணபுரம் பகுதி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது கான் மற்றும் அன்புக்கரசன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதைப் பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து தம்மம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் வேன் ஓட்டுனரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 farmers killed in van motorcycle accident in salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->