அதிரடி சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள்.! தந்தை, மகன் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் நகர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அதிரடியாக ஹோட்டலில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஹோட்டலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகையிலை பொருட்கள் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் நடத்தி வரும் கூத்தியார்குண்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(51) மற்றும் அவரது மகன் பாலசுப்பிரமணி(22) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், 8 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 persons arrested for hoarding tobacco products in madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->