கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள். விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த கேலோ இந்தியா நிகழ்வு தளமாக அமையும்.


தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நடத்தப்படும். செஸ் ஒலிம்பியாட் போல் பிரம்மாண்டமாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2023 Khelo india competition in tamilnadu Central govt approved


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->