ரெடியா! பாலமேடு ஜல்லிக்கட்டு! வெளியான அழைப்பிதழ்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

மேலும், போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை முதல் தொடங்கும் என ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்த அந்த அழைப்பிதழில், "நிகழும் சுபமங்களகரமான ஸ்ரீ சோபகிருது வருடம் தை மாதம் 02-ம் நாள் 16.01.2024 (செவ்வாய்க்கிழமை) காலை வேளையில் உலகப்ட புகழ் பெற்ற பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி சார்பாக ஜல்லிக்கட்டு விழா மஞ்சமலை ஆற்றில் வெகு சிறப்பாக நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 

அது சமயம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் சிறப்பான வெகுமதிகள் வழங்க இருப்பதால் அன்பு உள்ளங்கள் பரிசுப் பொருட்களையும், நிதிகளையும் வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2024 Palamedu Jallikattu 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->