செங்கல்பட்டு அருகே போதைப்பொருள் பயன்படுத்திய 21 மாணவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் தனியார் கல்லூரி ஒன்றை சுற்றியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கனவே தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஆயிரம் பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியதில், குடியிருப்பில் உள்ள 688 வீடுகளில் 15 பேரிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

15 பேரிடம் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டு 20 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

21 students arrested for drugs use in sengalpat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->