மதுரையில் சோகம்: லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் பலி.! பூஜை பொருட்கள் வாங்கச் சென்றபோது பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் திருவிழாவிற்கு பூஜை பொருள்கள் வாங்க சென்றபோது லாரி - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகு தெய்வநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாயாண்டி (60) மற்றும் தங்கம்(56). இவர்கள் இரண்டு பேரும் வெளியூரில் வசித்து வந்த நிலையில், தற்பொழுது கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் திருவிழாவிற்கு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மாயாண்டி, தங்கம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (30) ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பேரையூர் சென்றனர்.

அப்பொழுது சிலைமலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்த நிலையில், அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed in motorcycle lorry accident in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->