இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறை மீனவ கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் தொலைவில் இலங்கையை சேர்ந்த பைபர் படகை வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து படையில் இருந்த 3 இலங்கை மீனவர்களை வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை செய்ததில் யாழ்ப்பணத்தை சேர்ந்த ரீகன், சிவக்குமார், ஸ்ரீகாந்த் என தெரியவந்தது.

மேலும் தங்களது படத்தின் இஞ்சின் பழுதானதால் 4 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அத்துமீறி எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீனவர்களா அல்லது கஞ்சா கடத்த தமிழகம் வந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 srilankan fishermen arrested by TN Navy police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->