அடுத்தடுத்து மோதிய பேருந்துகள்.. மீண்டும் கோர விபத்து; அதிகாலையிலேயே 4 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூரில் உள்ள இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலே பலியான நிலையில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்வோர் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்வதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. 

நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட இரு வேறு சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மறைவதற்குள் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு சொகுசு பேருந்தின் மீது மோதியுள்ளது. 

இதனை அடுத்து பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து லாரியின் பின்பக்கம் தனியார் ஆம்னி பேருந்தும் மோதியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பிடிக்காமல் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி அடுத்தடுத்து மூன்று பேருந்துகளும் விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோரை விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிக பாரம் ஏற்றி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் ஃபெயிலியர் ஆனதால் எதிரியே வந்த அரசு சொகுசு பேருந்து மீது முதலில் லாரி மோதியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 person died in chengalpattu bus accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->